Showing posts with label உனக்கு உரிமை இல்லை. Show all posts
Showing posts with label உனக்கு உரிமை இல்லை. Show all posts

Wednesday, 8 August 2018

இனியும் ஏனோ?

இருவர் உள்ளம் வெவ்வேறென்றறிந்த பின்னே இனியும் ஒன்றென்ற ஒத்திகை நாடகம் ஏனோ?
சந்தேகத்திற்கு இடமளிக்காமல் விளங்கிய பின்பும் இந்த ஒத்திகை நாடகம் ஏனோ?
2018080802


உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி...   திட்டமிட்டபடி அனைத்தும் சென்றதென்றால் அடுத்த மாதத்திலிருந்து இந்தாண்டில் 12 - இபுத்தகங்ள் வெளியிடுவதாய் திட்டமிட்டு இருந்த அனைத்து புத்தகங்களும் உங்களை வந்து சேரும். இதுவரை வெளியிட்ட ஆறு புத்தகங்களையும் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  வாசிக்க விரும்புவோர்... என்னை தொடர்பு கொள்ளலாம்.  அல்லது வரும் செப்டம்பர் 5 அன்று அதற்கான தகவல்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.



Wednesday, 25 July 2018

யூடியூப் லைவ் – 5 செப்டம்பர் – 2018 – அடுத்த படைப்பு துவக்க அழைப்பு

அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.
இந்த இரு மாதங்கள் வெவ்வேறு பணிகளால் தினம் ஒரு கவிதைப் பகுதி சிறிது தொய்வடைந்து விட்டாலும் வரும் 5 செப்டம்பர் முதல் தொடர்ந்து பல படைப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  அன்றைய தினம் புதிய படைப்பையும் துவங்க உள்ளேன்.. அதைப் பற்றிய தகவல்களை யூடியூப் லைவ் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்பதனையும் இங்கே உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.  விரைவில் சந்திப்போம்..

உங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. 5 செப்டம்பர் 2018 காலை 10 மணிக்கு சந்திப்போம்..
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..  அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு..




அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்