Tuesday, 7 August 2018

காற்றோடு காற்றாகிவிட்டார் கலைஞர்

இன்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.
2018080702

முத்தமிழை முன்னுக்கு நிறுத்தி
முறையாய் அதற்கென நீ செய்த
முயற்சிகள் யாவும்..
காற்றோடு காற்றாய் கலந்து
கலைஞன் உன் புகழ் பாடுமையா!

முப்பால் தந்த பொதுமறை கவிஞனை
எக்காலமும் யாவரும் நினைத்திருக்க
முக்கடல் கூடலில் வானுயர நிறுத்தி
தமிழுக்கும் தமிழருக்கும் நீ தந்த உயர்வு
காற்றோடு காற்றாய் கலந்து
மூச்சுக்காற்றாய் உன் புகழ் வாழ்விக்குமையா!

சமூக நீதிகளை சட்டமாக்கி
சட்டங்களை நிகழ்வாக்கி
சம உரிமையால் சமத்துவத்தை
இம்மண்ணில் பரவலாக்கி
நீ செய்த சாதனைகள்
காற்றோடு காற்றாய் கலந்து
சமூகப் போராளி உன் புகழ் பரப்புமையா!

காலம் உன் உடல்களை களவாடிட..
எக்காலமும் களவாட முடியா
உன் முத்தமிழ் படைப்புகள்
முடி சூடி இம்மண்ணில்
நெஞ்சோடு நிறைந்து
நெஞ்சுக்கு நீதியாய்
உன் புகழ் நிலைக்கச் செய்யுமையா!

============

– தனிப்பட்ட முறையில் கோபங்கள் பல இருந்தாலும் ஒப்பிட்டு அளவில் மட்டுமின்றி தமிழுக்காற்றிய தொண்டுக்காக பங்களிப்புக்காக அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கை அவருக்கு அருள வேண்டிக்கொள்கிறேன்.

கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment