Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts
Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts

Tuesday, 7 August 2018

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நெஞ்சுக்கு நீதி சொன்ன தலைவா!

நேற்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.  ஜெயலலிதா அவர்கள் இறந்த போது "அம்மா" என்ற தலைப்பில் எழுதிய வரிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இருக்கு.  கலைஞர் கலைஞரென்பதால் தானோ எனக்கு இத்தனை பாசம் வருகிறதோ? அதுவும் தெரியவில்லை.  இருந்தும் எழுதி வைத்துள்ளேன் கலைஞருக்கும் எனக்குமான எண்ணச் சிதறல்களை ஒவ்வொன்றாய் கொண்டு வந்து சேர்க்கிறேன்.  அவைகளில் சில இச்சமயத்தில் வெளியிட முடியாதவையும் கூட. 

இந்த வரிகளை உங்களுக்கு பிடித்த இசைவடிவத்தில் நீங்களே பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்..  நானும் பாடிக் கொண்டே தான் எழுந்தேன்.. இவ்வரிகளை பாடிக் கொண்டே தான் இன்று காலை எழுந்தேன்.

(முடிந்தால் இன்று இரவுக்குள் பாடி அனுப்பி வைக்கிறேன்.)

2018080801




























காற்றோடு காற்றாகிவிட்டார் கலைஞர்

இன்று (07 -ஆகஸ்ட்-18) காலமாகிவிட்ட முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு எனது இதயஞ்சலியாக இவ்வரிகள்.
2018080702

முத்தமிழை முன்னுக்கு நிறுத்தி
முறையாய் அதற்கென நீ செய்த
முயற்சிகள் யாவும்..
காற்றோடு காற்றாய் கலந்து
கலைஞன் உன் புகழ் பாடுமையா!

முப்பால் தந்த பொதுமறை கவிஞனை
எக்காலமும் யாவரும் நினைத்திருக்க
முக்கடல் கூடலில் வானுயர நிறுத்தி
தமிழுக்கும் தமிழருக்கும் நீ தந்த உயர்வு
காற்றோடு காற்றாய் கலந்து
மூச்சுக்காற்றாய் உன் புகழ் வாழ்விக்குமையா!

சமூக நீதிகளை சட்டமாக்கி
சட்டங்களை நிகழ்வாக்கி
சம உரிமையால் சமத்துவத்தை
இம்மண்ணில் பரவலாக்கி
நீ செய்த சாதனைகள்
காற்றோடு காற்றாய் கலந்து
சமூகப் போராளி உன் புகழ் பரப்புமையா!

காலம் உன் உடல்களை களவாடிட..
எக்காலமும் களவாட முடியா
உன் முத்தமிழ் படைப்புகள்
முடி சூடி இம்மண்ணில்
நெஞ்சோடு நிறைந்து
நெஞ்சுக்கு நீதியாய்
உன் புகழ் நிலைக்கச் செய்யுமையா!

============

– தனிப்பட்ட முறையில் கோபங்கள் பல இருந்தாலும் ஒப்பிட்டு அளவில் மட்டுமின்றி தமிழுக்காற்றிய தொண்டுக்காக பங்களிப்புக்காக அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கை அவருக்கு அருள வேண்டிக்கொள்கிறேன்.

கருவெளி ராச.மகேந்திரன்