Tuesday, 14 March 2017

நிலவின் பயணம்

நிலவின் பயணத்தை, வரிகள் பிறப்பு பற்றி சில வரிகளுடன் ஆரம்பிக்கலாமே..

பல விசயங்கள் நம் கவனம் ஈர்ப்பதேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மிக முக்கியமான  காரணமாக,  நிகழ்வுகளையும் நம் மனநிலையையும் சொல்லலாம்.  இக்கவிதை பிறப்பதற்கான காரணமும் அவையே தான்.  முதல் இரண்டு வரிகள் தோன்றக் காரணமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீதி உலா வரும் போது விரைந்து பயணிக்கும் மேகங்களுக்கிடையே அந்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது தான்.   பிறகென்ன…  பிறந்து விட்டது நிலவின் பயணம்…  உடனுக்குடன் உங்களுக்காக…
மூன்று நாட்களும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நிலவுக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..  இது அவ்வளவு நல்லதல்ல!  இந்த கடைசி வரிகளுக்கான அர்த்தம் என்னைத் தவிர இந்த மண்ணில் இன்னொருவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் இக்கவிதையை வாசிப்பாரா? என்று எனக்குத் தெரியாது) . அவருக்காக (உங்களுக்காகவுந்தான்) “ இனி நான் என்ன செய்வேன்?”  என்ற தலைப்பில் கவிதையும் தயாராக உள்ளது.  ஆனால் வெளியிட மனமில்லை..


No comments:

Post a Comment